Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.


Nature Reviews Earth & Environment என்றபத்திரிகையில். வெளியாகி உள்ள சர்வதேச ஆய்வு ஒன்றில், உலகளாவிய அடிப்படையில் நிலப்பகுதிகளை விட மலைப் பிரதேசங்களில் நிலவும் காலநிலை மாற்றத்தின் தீவிரம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மலைப் பகுதிகளில் வாழும் மக்கள்அல்லது அதில் தங்கியிருப்பவர்கள் என பில்லியன் கணக்கான மக்களுக்கு மோசமான அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. EDCC எனப்படும் (elevation-dependent climate change) இந்த நிகழ்வின் விளைவாக மலைப் பிரதேசங்களின் உச்சியில் நிகழும் காலநிலை மாற்ற வேகம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்தக் காலநிலை மாற்றம் மலைப் பகுதிகளில் நிலவும் வெப்பநிலை, மழைவீழ்ச்சி, வெண்பனி கொட்டுதல் ஆகிய இயற்கை நிகழ்வுகளின் தீவிரத்தை உள்ளடக்கியதாகும். Portsmouth பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் நிக் பெப்பின் தலைமையிலான ஆய்வுக் குழு பூமியின் முக்கிய மலைத் தொடர்களான ராக்கி மலைத் தொடர், ஆல்ப்ஸ் மற்றும் அந்தீஸ் மற்றும் திபேத்தியன் பீடபூம் ஆகியவற்றை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர். இதன் மூலம் பெறப்பட்ட உலகளாவிய கட்டமைக்கப் பட்ட தரவுத் தொகுப்புக்கள் மூலம் தெரிய வந்த விடயங்களில் 1980 இற்கும் 2020 இற்கும் இடைப்பட்ட காலத்தில் காலநிலை மாற்றத்தின் வேகம் அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றது.
வெப்பநிலையை எடுத்துக் கொண்டால் பள்ளங்களை விட மலைப் பகுதிகளில் ஒவ்வொரு நூற்றாண்டும் 0.21 பாகை செல்சியஸ் அளவில் சராசரியாக வேகமெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மழைவீழ்ச்சியை எடுத்துக் கொண்டால் சமீப காலமாக முன்பு எதிர்வுகூறாத விதத்தில் மழை வீழ்ச்சி அதிகமாகி இருப்பதுடன் இது பனிப்பொழிவின் இடத்தையும் ஆக்கிரமித்துள்ளது.
இந்த காலநிலை மாற்றம் வடதுருவத்தின் ஆர்க்டிக் மலைத் தொடரையும் விட்டு வைக்கவில்லை. இதற்குக் காரணம் ஆர்க்டிக் மலைத் தொடர் ஏனைய மலைத் தொடர்களுடன் ஒத்துப் போகும் விதத்தில் பல பண்புகளைக் கொண்டிருப்பதாகும்.
இதேவேளை குறிப்பிடப் பட்ட அனைத்து மலைத் தொடர்களிலும் படிந்திருக்கும் பனிப்பாறைகள் உருகி மிக வேகமாக அவற்றை இழந்து வருவதாலும் சுற்றுச் சூழலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் ஒரு மலைத் தொடரின் உச்சத்துக்கு செல்ல செல்ல காலநிலை மாற்றத்தின் வீதமும் தீவிரமாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் தாக்கங்கள் மலை சமூகங்களுக்கு அப்பாலும் நீண்டுள்ளன. உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தண்ணீருக்காக மலை பனி மற்றும் பனிப்பாறைகளை நம்பியுள்ளனர், இதில் உலகின் இரண்டு பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகளான சீனா மற்றும் இந்தியா உட்பட, இமயமலையிலிருந்து தண்ணீரைப் பெறுகிறார்கள்.
டாக்டர் பெபின் மேலும் கூறினார், “இமயமலை பனி நாம் நினைத்ததை விட வேகமாகக் குறைந்து வருகிறது. வெப்பமாகிவிட்டதால் பனிப்பொழிவிலிருந்து மழைக்கு மாறும்போது, பேரழிவு தரும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆபத்தான நிகழ்வுகளும் அதிகமாகின்றன.”
“வெப்பநிலை அதிகரிக்கும் போது, மரங்களும் விலங்குகளும் குளிரான சூழ்நிலைகளைத் துரத்தி மலைகளில் மேலே நகர்கின்றன. ஆனால் இறுதியில், சில சந்தர்ப்பங்களில், அவை மலையிலிருந்து வெளியேறி உச்சியிலிருந்து தள்ளப்படும். வேறு எங்கும் செல்ல முடியாததால், இனங்கள் இழக்கப்படலாம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் அடிப்படையில் மாறக்கூடும்.”
சமீபத்திய நிகழ்வுகள் அவசரத்தை எடுத்துக்காட்டுகின்றன. பாகிஸ்தானில் இந்த கோடையை டாக்டர் பெபின் சுட்டிக்காட்டுகிறார், இது ஆண்டுகளில் மிகக் கொடிய பருவமழை காலநிலையை அனுபவித்தது, மேக வெடிப்புகள் மற்றும் தீவிர மலை மழைப்பொழிவு 1,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.