new bacteria engineered glowing green detecting micro plastics

தண்ணீரில் மைக்ரோ பிளாஸ்டிக் மாசைக் கண்டறிய நவீன தீர்வு

தண்ணீரில் இதுவரை பிளாஸ்டிக் மாசினைக் கண்டறியும் தொழிநுட்பம் கடினமானதாகவும், மெதுவானதாகவும், விலை உயர்ந்ததாகவும், வினைத்திறன் அற்றதாகவுமே இருந்து வந்தது. இந்நிலையில் தண்ணீரில் பயன்படுத்தப் படும் பொறிமுறை முடுக்கப் பட்ட பக்டீரியா (Engineered Bacteria) இதற்கு மிகத் திருத்தமான ஒரு தீர்வைத் தந்துள்ளது.

தண்ணீர் மாதிரிகளில் இந்த பக்டீரியா பொறிமுறை பயன்படுத்தப் படும் போது அது கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ பிளாஸ்டிக் மாசுகளுடன் தாக்கத்தை ஏற்படுத்தினால் உடனடியாக பச்சை நிறத்தில் ஒளிர்வதன் மூலம் அதனை இனம் காண்கின்றது. மைக்ரோ பிளாஸ்டிக் மாதிரிகள் காற்றில் அல்லது மண்ணில் அல்லது நீரில் காணப் பட்டாலும் அவை மிகச் சிறியவையாக இருப்பதால் சுத்திகரிப்பு கடினமாக உள்ளது.

ACS Sensors எனப்படும் இரசாயனவியல் ஊடகத்தில் பதிவிடப் பட்ட தகவலில், தற்போது, ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக்குடன் இணைக்கப்பட்டு பச்சை நிற ஒளிரும் தன்மையை உருவாக்கும் ஒரு உயிருள்ள உணரியை (பக்டீரியா பொறிமுறை) உருவாக்கியுள்ளனர். நிஜ உலக நீர் மாதிரிகள் மீதான ஆரம்ப சோதனையில், உயிரியல் உணரி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அளவு நுண் பிளாஸ்டிக்குகளை எளிதாகக் கண்டறிய முடியும்.

தற்போது, ​​விஞ்ஞானிகள் நீர் மாதிரிகளில் உள்ள நுண்ணிய பிளாஸ்டிக்குகளை நுண்ணோக்கிகள் அல்லது அகச்சிவப்பு அல்லது ராமன் நிறமாலை போன்ற பகுப்பாய்வு கருவிகளைப் பயன்படுத்திக் கண்டறிகின்றனர். இந்த நுட்பங்கள் துல்லியமானவை என்றாலும், பகுப்பாய்விற்கு முன் மாதிரிகளைத் தயாரிக்க பல படிகள் தேவைப்படுகின்றன, மேலும் அவை விலை உயர்ந்ததாகவும் நேரத்தை எடுத்துக்கொள்வதாக்வும் உள்ளன.

இந்நிலையில் எளிமையான முறையை நோக்கிய ஒரு படியாக, சாங் லின் சுவா மற்றும் சகாக்கள் சூடோமோனாஸ் ஏருகினோசா என்ற பாக்டீரியாவிலிருந்து ஒரு உயிருள்ள நுண் பிளாஸ்டிக் உணரியை உருவாக்கினர்.”எங்கள் பயோசென்சர் சில மணி நேரங்களுக்குள் சுற்றுச்சூழல் மாதிரிகளில் மைக்ரோபிளாஸ்டிக்களைக் கண்டறிய வேகமான, மலிவு மற்றும் உணர்திறன் வாய்ந்த வழியை வழங்குகிறது,” என்று சுவா கூறுவது குறிப்பிடத்தக்கது.