முக்கிய கட்டுரைகள்

முகப்பு கட்டுரைகள் விஞ்ஞானத் துறைகள் அறிவியல் செய்திகள் விஞ்ஞான கண்ணோட்டம் YouTube Corner Contact About Us

computerized picture of a kilonova

நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவில் தோன்றும் கருந்துளை தொடர்பில் புதிய மீளாய்வு

சூரியப் புயல்களை எதிர்கொள்ள அதிநவீன நட்சத்திரத் தொகுதி செயற்திட்டம்!

9th planet evidences again revealed

மீளவும் 9 ஆவது கிரகம் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்ட வானியலாளர்கள்

தனது அசாதாரணமான சுற்றுவட்டப் பாதை மற்றும் இயக்கத்தினால் புளூட்டோ கிரகமானது  2006 ஆமாண்டு சூரிய குடும்பத்தில் ஒரு கிரக அந்தஸ்தை இழந்திருந்தது. இதனால் இதுவரை சூரிய குடும்பத்தில் பூமி உட்பட 8 கிரகங்களே இருந்து வந்தது.

இந்நிலையில் 9 ஆவதாக  நெப்டியூனுக்கு அப்பால் இன்னொரு கிரகம் இருப்பதற்கான சான்றுகள் சில வெளியாகி உள்ளன. நெப்டியூனுக்கு சற்று தூரத்தில் அமைந்திருக்கும் வெளிப்புறக் கிரகமான இதனை K2-18b எனப் பெயரிடப் பட்டுள்ளது. இது சூரியனில் இருந்து 46.5 பில்லியன் முதல் 65.1 பில்லியன் Km கள் தூரத்தில் உள்ளது

மிகவும் பிரகாசம் குறைந்த இந்த கிரகத்தை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தாய்வானைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் மேற்கொண்ட இரு ஆழமான அகச்சிவப்புக் கதிர் ஆய்வின் மூலம் இதன் இருப்பு ஊர்ஜிதமானது. இந்த ஆய்வு 1983 முதல் 2006 ஆமாண்டு வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்டது.

திடீரென தனது இருப்பைக் காட்டி விட்டு மறைந்து போன குறித்த கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி வர 10 000 வருடங்கள் முதல், 20 000 வருடங்கள் வரை எடுக்கலாம் எனவும் கணிக்கப் பட்டுள்ளது.

நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பனிக் கட்டிகளாலான விண்கற் தொகுதி கியூப்பர் பெல்ட் என்றழைக்கப் படுகின்றது. இதிலுள்ள சில விண்கற்கள் அப்படியே கிரகங்களின் சுற்றுவட்டப் பாதைக்கு எதிர் திசையில் பயணிக்கின்றன. இதனால் இப்பகுதியில் இருக்கும் புளூட்டோ அல்லது புதிய 9 ஆவது கிரகத்தின் பாதையைக் கணிப்பதும் கடினமாகவே உள்ளது.

ஆனால் புளூட்டோவைப் போன்றல்லாது குறித்த K2-18b கிரகம் சூரியனுடனான தனது சுற்று வட்டப் பாதையை நிறைவு செய்து வருவதாகக் கருதப் படுகின்றதே தவிர இன்னமும் நிரூபிக்கப் படவில்லை. இதுவே இது கிரக அந்தஸ்து பெறக் கடினமாக இருக்கும் முக்கிய காரணி ஆகும்.

Ice Giant அதாவது பனி இராட்சதன் என அழைக்கப் படும் K2-18b கிரகம் பூமியை விட 10 முதல் 17 மடங்கு பெரிதாக இருக்கக் கூடியது. வெப்ப நிலை  –370°F முதல் –360°F வரை நிலவக் கூடிய கடும் குளிரான கிரகமாகும்.

இந்த 9 ஆவது கிரகம் இருப்பது உறுதியானால் அது வானியல் தொடர்பான பள்ளிப் பாடப் புத்தகங்களை திரும்ப எழுதத் தூண்டும் காரணிகளில் ஒன்றாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

வெள்ளி கிரகம் புவியியல் ரீதியாக உயிர்ப்புடன் உள்ளது! : நாசா

வெள்ளிக் கிரகத்தைப் பற்றி கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நாசா விண்வெளி ஆய்வு மையம் ஆய்வு செய்து வருகின்றது. இதில் சேகரிக்கப் பட்ட தகவல்களுடன் அண்மைய மீளாய்வு ஒன்று பூமியைப் போன்றே புவியியல் ரீதியில் வெள்ளிக் கிரகம் உயிர்ப்புடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது புவியியல் அடிப்படையில் இறந்து விட்டதாகக் கருதப் பட்ட வெள்ளிக் கிரகத்தின் உள் மையத்தின் இயங்கு நிலை ஆக்டிவாக இருப்பதாக தற்போது தெரிவிக்கப் படுகின்றது. 1996 ஆமாண்டு மகெல்லன் விண்கலத்தால் படம் பிடிக்கப் பட்ட வெள்ளிக் கிரகத்தின் மேற்பரப்பு கூட இதற்கு சான்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மகெல்லன் விண்கலம் வெள்ளிக் கிரகத்தை படம் பிடிக்கத் தொடங்கி 3 தசாப்தங்கள் ஆகி விட்ட நிலையில் அது எடுத்த படங்களில் சூடான பதார்த்தம் வெள்ளியின் தரைக்குள்ளே இருந்து வருவது புலப்படுவதுடன் இது வெள்ளியின் மேலடுக்கு (Crust) இன்னமும் செதுக்கப் பட்டிருப்பதற்கான ஆதாரம் என்றும் கருதப் படுகின்றது.

சமீபத்திய சான்றுகள் வெள்ளியின் மேற்பரப்பில் உள்ள டஜன் கணக்கான பெரிய, வளைய வடிவ அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளன. கரோனா எனப்படும் இந்த அம்சங்கள், கரோனாவின் ஆழத்திலிருந்து சூடான பாறைத் தூண்கள் மேலோட்டத்தின் ஆழத்திலிருந்து உயர்ந்து, மேலோட்டத்தை மேல்நோக்கித் தள்ளும்போது உருவாகின்றன. மேற்பரப்பு குளிர்ந்து சரிந்தவுடன், ஒரு வட்ட அமைப்பு பின்னால் விடப்படுகிறது. ஆய்வாளர் காசியோலியும் அவரது குழுவும் இந்த அம்சங்களுக்கான பல உருவாக்கக் காட்சிகளை உருவகப்படுத்தி, அவற்றின் முடிவுகளை மாகெல்லனின் தரவுகளுடன் ஒப்பிட்டனர்.

இந்த கணிக்கப்பட்ட மற்றும் உண்மையான உருவகக் காட்சித் தரவு சில கரோனாக்களுக்கு மிக நெருக்கமாக இணைந்திருந்ததால், “எங்கள் கண்களை நம்பவே முடியவில்லை” என்று அறிவியலாளர் காசியோலி சயின்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

உருவ அமைப்பில் ஒத்திருக்கும் வெள்ளியும், பூமியும் பில்லியன் வருடங்களுக்கு முன்பாக தண்ணீர் மூலக்கூறுகளால் நிறைந்திருந்தன. ஆனால் பின்பு வெள்ளி ஒரு நரகம் போன்று வாழத் தகுதி இல்லாத நிலமாகவும், பூமி உயிர்ப் பல்வகைமையுடனும் மாற்றம் அடைந்துள்ளன. இதற்கான காரணமும் இன்னமும் அறிவியலாளர்களுக்கு ஒரு மர்மமாகவே இருந்து வருகின்றது

கல்லீரலில் கொழுப்புச் சத்து மற்றும் இனிப்பு அளவைக் கட்டுப்படுத்தும் புதிய மரபணு கண்டுபிடிப்பு

Science advances இதழில் பிரசுரிக்கப் பட்டுள்ள புதிய கல்வி ஆய்வில் மனித உடலில் கல்லீரலில் உள்ள கொழுப்பு சத்து மற்றும் இனிப்பின் அளவைக் கட்டுப்படுத்தும் தனித்த மரபணு ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கல்லீரல் (Liver) எவ்வாறு சக்தியைச் சேமிக்கின்றது என்பதை நிர்ணயிக்கும் இந்த மரபணு (gene) இதன் மூலம் type 2 diabetes அதாவது 2 ஆம் வகை நீரழிவு நோய் போன்றவற்றை குணப்படுத்தவும் வகை செய்கின்றது.

பேராசிரியர் Penn Nursing’s Kate Townsend Creasy என்பவர் உடல்நல ஆரோக்கிய விஞ்ஞானத்துக்கான கல்வி நிலையத்தில் மேற்கொண்ட ஆய்வில் இந்த PPP1R3B என்ற ஜீன் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த ஜீன் எமது கல்லீரலுக்கு அது எப்படி இனிப்புக்கான glycogen இனையும், கொழுப்புக்கான triglycerides இனையும் சேகரிக்க வேண்டும் எனக் கட்டளையிடக் கூடியதாகும்.

கல்லீரலில் இவ்வாறு இடம்பெறக் கூடிய செயற்பாடே எமது உடலில் இரத்தத்தில் உள்ள இனிப்பு மற்றும் கொழுப்பினைக் கட்டுப் படுத்தி ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி வகுக்கின்றது. இதனால் Type 2 நீரிழிவு நோயும், கல்லீரலில் சேகரிக்கப் படக் கூடிய அதிகபட்ச கொழுப்பும் குணப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இந்த ஜீன் எவ்வாறு இச்செயற்பாட்டில் ஈடுபடுகின்றது என்பது இன்னமும் தெளிவாகக் கூறப்படவில்லை. ஆனாலும் Creasy கூறுகையில் குறித்த ஜீன் ஆனது கல்லீரலில் ஒரு சுவிட்ச் போன்று தொழிற்படுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்பானது நீரழிவு போன்ற வளர்சிதை மாற்ற நோய்களுக்கு அவர்களின் மரபியல் அடிப்படையில் துல்லியமான ஊட்டச்சத்து அணுகு முறைகளுடன் உதவப் புதிய வழிகளைக் கண்டறிய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான கட்டமைப்பைக் கொண்டிருந்த சூப்பர் நோவாவின் எச்சம் கண்டுபிடிப்பு

விண்வெளியில் சூப்பர் நோவா எச்சங்கள் எனப்படுவது ஒரு சூப்பர் நோவா வெடிப்பின் பின் எஞ்சியிருக்கும் தூசு துகள்களால் ஆன மிச்சம் ஆகும். விண்மீன்களின் அழிவடையும் கட்டத்தில் சூப்பர் நோவாக்களாக வெடித்து ஏற்படும் விளைவில் இருந்து மீண்டும் புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களின் தோற்றம் ஏற்படுகின்றது. பொதுவாக இந்த சூப்பர் நோவா எச்சங்கள் ஒரு முழுமையான கேத்திர கணித (Geometrical) கட்டமைப்பைக் கொண்டிருப்பதில்லை.

இந்நிலையில் சமீத்தில் சர்வதேஏச வானிலாளர்கள் குழு ஒன்று கண்டறிந்த சூப்பர் நோவா எச்சமானாது மிகத் திருத்தமான வட்ட சமச்சீரைக் கொண்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மே 7 ஆம் திகதி arXiv தளத்தில் பிரசுரிக்கப் பட்ட மீளாய்வில் இந்த சூப்பர் நோவா கீறீக் மொழியில் முழுமை எனப் பொருள் படும் விதத்தில் ‘Teleios’ எனப் புனைப் பெயரிடப் பட்டுள்ளது. SNR என சுருக்கமாக அழைக்ப் படும் சூப்பர் நோவா எச்சங்கள் பூமியில் இருந்து பல சக்தி வாய்ந்த தொலைக் காட்டிகளால் நோக்கப் படுகின்றன.

மிரோஸ்லாவ் D ஃபிலிப்போவிக் என்பவரால் வழிநடத்தப் பட்ட மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த வானியலாளர்கள் குழு இந்த SNR ஐ தற்செயலாகவே கண்டு பிடித்துள்ளனர். இதற்கு G305.4-2.2 எனப் பெயரிடப் பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள ASKAP எனப்படும் ரேடியோ தொலைக் காட்டியால் இந்த புதிய SNR அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த SNR பூமியிலிருந்து 7170 அல்லது 25 100 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் மிகத் திருத்தமான வட்ட வடிவில் இருக்கும் இதன் விட்டம் மாத்திரம் 45.6 அல்லது 156.5 ஒளியாண்டுகள் நீளம் கொண்டது ஆகும். வானியலாளர்களால் Teleios போன்ற மிகத் திருத்தமான கட்டமைப்புக்களை உடைய SNR கள் மிக சொற்பமாகவே இதுவரை அடையாளம் காணப் பட்டுள்ளன. அதிலும் இந்த Teleios SNR மிகவும் பிரகாசம் குன்றிய ஒரு சூப்பர் நோவா எச்சம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எமது பிரபஞ்சம் முன்பு கணிக்கப் பட்டதை விட மிக விரைவாக அழிவை நோக்கி செல்கிறது! : புதிய ஆய்வு முடிவுகள்

எமது பிரபஞ்சம் முன்பு கணித்ததை விட மிக வேகமாக சிதைவை (அழிவை) நோக்கிச் செல்வதாக ஹாவ்கிங் கதிர்வீச்சு அடிப்படையிலான ஆய்வு ஒன்றின் கணிப்புக்கள் மூலம் தெரிய வந்திருப்பதாக 3 டச்சு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கணிப்பானது இன்னும் 10 இன் 78 ஆம் அடுக்கு அதாவது 10 இன் பின்பு 78 பூச்சியங்களை சேர்த்தால் வரும் இலக்க ஆண்டுகள் கழியும் போது பிரபஞ்சத்தில் எஞ்சியிருக்கும் அனைத்து விண்வெளி தூசிகள் மற்றும் மாதிரிகள் யாவும் அழிவைச் சந்திக்கும் என்று கூறுகின்றது.

இதற்கு முன்பு நம் பிரபஞ்சத்தின் சடப்பொருள் மற்றும் சக்தி யாவும் தீர்ந்து அது முழுவதும் அழிவை சந்திக்க 10 இன் 1100 ஆம் அடுக்கு ஆண்டுகள் (10 இன் பின் 1100 பூச்சியங்கள்) எடுக்கும் என்றே கணிக்கப் பட்டிருந்தது.

கருந்துளை ஒன்றில் இருந்து ஒளியே தப்பிக்க இயலாத நிலையில் அதன் நிகழ்வெல்லை (event horizon) இல் இருந்து வெளி வரும் மர்ம கதிர் வீச்சு தான் ஹாவ்கிங் கதிர் வீச்சு ஆகும். இதனை இந்த நூற்றாண்டின் மிக முக்கிய இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாவ்கிங் கணித ரீதியாக நிரூபித்தார். இந்நிலையில் பிரஞ்சவியல் மற்றும் விண் துகள் பௌதிகவியல் ஆகியவற்றிட்கான நாளிதழில் இந்த கண்டுபிடிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பை நிகழ்த்திய விஞ்ஞானிகளில் கருந்துளை ஆய்வு வல்லுனரான ஹெயினோ ஃபால்க்கே மற்றும் குவாண்டம் பௌதிகவியலளாரன மைக்கேல் வொன்டிராக் மற்றும் கணிதவியலாளரான வால்ட்டர் வான் சுஜிலெகொம் ஆகியோர் அடங்குகின்றனர். இதன் போது அவர்கள் கருந்துளைகள் மாத்திரமன்றி நியூட்ரோன் நட்சத்திரங்களும், ஹாவ்கிங் கதிர்வீச்சினால் தமது தன்மையை இழந்து (evoparate) அழிகின்றன என்று விளக்கியுள்ளனர். இது தொடர்பான இவர்களது அறிவித்தல் வெளியான பின்பு அது விஞ்ஞான சமூகத்தினரிடையே பல கேள்விகளை எழுப்பி விட்டுள்ளது.

அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கையானது ஒரு கருந்துளை எப்போதும் பெரியதாகிக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் ஹாவ்கிங்க் கதிர்வீச்சு மற்றும் மற்றும் நிகழ்வெல்லையில் இருமை துகள்களில் ஒன்று வெளியாகுவது கரும் துளைக்கும் மறைவு உண்டு என்பதை எடுத்துக் காட்டியது. தற்போது ஈர்ப்பு விசை வலையத்தில் இருக்கக் கூடிய நியூட்ரோன் நட்சத்திரங்கள் கூட ஹாவ்கிங்க் கதிர்வீச்சு காரணமாக காலப் போக்கில் அழிவை சந்திக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ரீதியில் ஹாவ்கிங் கதிர்வீச்சு மூலம் மாத்திரமே பூமியும், நிலவும் அழிய வேண்டுமானால் அதற்கு 10 இன் 90 ஆம் அடுக்கு ஆண்டுகள் எடுக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஒரு கருந்துளை அல்லது நியூட்ரோன் நட்சத்திரம் தமது எல்லையற்ற ஈர்ப்பு விசையால் அதிகளவு ஹாவ்கிங் கதிர் வீச்சை வெளியிட்டு விரைவாக சிதைவடைவதே ஆகும். ஆனால் வேறு பல வானியல் இயக்க காரணிகளால் பூமியும், நிலவும் இந்தளவு எட்டப் பட முன்பே அழிந்து விடும் என்றும் விவரிக்கப் படுகின்றது.

சேர்ன் துகள் முடுக்கியில் ஈயம் தங்கமாக உருமாற்றம்

சுவிட்சர்லாந்து பிரான்ஸ் எல்லையில் ஜெனீவாவில் அமைந்துள்ள சேர்ன் எனப்படும் ஐரோப்பிய அணுவாய்வு மையத்திலுள்ள LHC என்ற உலகின் மிகப் பெரிய துகள் முடுக்கி மேற்கொண்ட முக்கிய பரிசோதனைகள் தொடர்பாக சமீபத்தில் ஓர் அரிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் ஈய (Lead) அணுக்களை மோத விடுவதன் மூலம் ஒவ்வொரு செக்கனுக்கும் 89 000 தங்க அணுக்கருக்களை (Gold Nuclei) இனை உருவாக்கியுள்ளது.

Medieval எனப்படும் மத்திய இடைக்காலத்தை சேர்ந்த இரச வாதிகள் Chrysopoeia எனப்படும் முறை மூலம் ஈயத்தை தங்கமாக மாற்றும் உத்தியைக் கொண்டிருந்ததாக உறுதிப் படுத்தப் படாத தகவல் வரலாற்றில் உள்ளது. ஆனால் சமீபத்தில் அதாவது 2015 – 2018 இடைப்பட்ட காலத்தில் ஒளியின் வேகத்தில் 99.999993% ஈய அணுக்களை ஒன்றுடன் இன்னொன்று மோதச் செய்த போது மிக மிகச் சிறியளவில் 1 கிராமில் 29 டிரில்லியன் பங்கு தங்கமே உருவாகியுள்ளது.

ALICE எனப்படும் மிகப் பெரும் அயன் மோதுகைக் கருவியில் நிகழ்த்தப் பட்ட இப்பரிசோதனையில் இக்கண்டுபிடிப்பு அறியப் பட்டது. மிக அரிதான மின்காந்தவிய அணுக்கரு உருமாற்றம் பற்றிய கல்விக்கு இப்பரிசோதனை உதவியுள்ளது. தங்கத்தின் அணுக்கருவில் சுமார் 79 புரோட்டோன்களும், ஈயத்தின் அணுக்கருவில் சுமார் 76 ஈயங்களும் உள்ளன. மேலும் மூலகங்களை வகைப் படுத்தும் ஆவர்த்தன அட்டவணையில் இவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.

கதிர்வீச்சை வெளியிட வல்ல பாதரசம் (Mercury) 80 புரோட்டன்களையும், மற்றும் கொடிய விஷமான தாலியம் (Thallium) 81 புரோட்டன்களையும் கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாலியின் காம்பி ஃப்லெக்ரெய் கல்டெராவில் நிலநடுக்க அபாயம்

இத்தாலியின் காம்பி ஃப்லெக்ரெய் என்ற எரிமலைப் பகுதியில் வாழும் இலட்சக் கணக்கான மக்கள் கடந்த 2022 இல் இருந்து அதிகளவில் தொடர் நிலநடுக்க அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இங்கு தரை மேற்பரப்பானது மிக மெதுவாக மேலிருந்து கீழ் அசைவது உணரப்பட்டும் வருகின்றது.

இங்கு நிலநடுக்கத்தின் அதிகளவு அழுத்தத்தால் நிலத்தடி நீர் அதிக வெப்பத்துடன் சீறிப் பாய்ந்து வரும் கிணறுகளும், பாதாள ஓடைகளும் உள்ளன. இந்த அழுத்தத்தை மதிப்பிடுவதன் மூலம் இனி ஏற்படக் கூடிய நிலநடுக்கத்தின் வீரியத்தை அறிய முடியும் என Science Advances என்ற நாளிதழில் வெளியிடப் பட்டுள்ள மீளாய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக இந்த புவியியல் செயற்பாடு 1980 இல் அதிக அழுத்தத்துடன் இருந்ததாகவும் அதன் பின் கடந்த 15 வருடங்களாக மேலும் ஆக்டிவாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் மேற்பரப்பில் ஓடக்கூடிய தண்ணீரின் வீச்சம் மற்றும் கிணற்றில் இருந்து குறைவான அழுத்தத்தால் உள் வாங்கப் படும் நீர் போன்றவற்றைக் கண்காணித்து நில நடுக்கத்தை அல்லது எரிமலை வெடிப்பு அபாயத்தை முன்னறிவிக்க முடியும் என Stanford Doerr School பேராசிரியர் டிஷியானா வனோரியோ தெரிவித்துள்ளார்.

இக்கல்வியில் 1982-1984 மற்றும் 2011-2024 வரை சேகரிக்கப் பட்ட தகவல்கள் கணக்கிடப் பட்டன. இதில் பாறை மாதிரிகளைக் கற்கும் பௌதிகவியல் முறை மூலம் மாத்திரமே நிலத்தடி குறித்த எண்ணிக்கை கணக்கீட்டை மேற்கொள்ள முடியும் என்றும் கருதப் படுகின்றது. 8 மைல்கள் அகலமான அகன்ற எரிமலையான காம்பி ஃப்லெக்ரெய் கல்டெரா பூமியின் மேற்பரப்பில் கடும் நாசத்தை ஏற்படுத்தும் விதத்தில் 39 000 மற்றும் 15 000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வெடிப்புக்களின் போது உருவானதாகக் கூறப்படுகின்றது.

1982 – 1984 ஆமாண்டு நிலநடுக்க சமயங்களின் போது கிட்டத்தட்ட 3 அடி ஆழத்துக்கு இந்தப் பகுதி உள்ளே இறங்கியுள்ளது. இந்தப் பகுதி வீரியமாக இருந்த வேளைகளில் எல்லாம் எரிமலைக் குழம்பான மக்மா, தண்ணீர், நீராவி மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு ஆகியவற்றை வெளியேற்றி வந்துள்ளது. தற்போது புவிநிலத்தடியியல் (Seismology) மற்றும் பாறை பௌதிகவியல் (rock physics) போன்ற கல்விகள் இணைந்து இப்பகுதியில் உள்ள அபாய நிலை பற்றி அறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இரசாயனவியலில் கணக்கீட்டை எளிதாக்கும் புதிய மாடல்

சமீபத்தில் புதிய இரசாயனத் தாக்கங்களை வடிவமைக்கும் போது ஒரு எதிர்வினை தொடர வேண்டிய திரும்பாத புள்ளியினை எட்டும் ஒரு சந்தர்ப்பத்தைச் சந்தித்தனர். இதன் போது பெறப்பட்ட தகவல் விரும்பிய எதிர்வினை ஏற்பட அனுமதிக்கும் சரியான நிலமைகளை உருவாக்க இரசாயனவியலாளர்களை அனுமதிக்கின்றது.

இதன் மூலம் எரிபொருள்கள் முதல் மருந்துகள் வரை பயனுள்ள சேர்மங்களை உருவாக்கும் மிகத் திறமையான இரசாயனத் தாக்கங்களை வடிவமைக்கும் விரைவான கணக்கீட்டு முறையைப் பயன்படுத்த முடியும். நிலை மாற்றம், மற்றும் இரசயான எதிர்வினைத் தாக்கங்களை எடுக்கும் பாதையைக் கணிக்கும் தற்போதைய முறைகள் சிக்கலானவை மற்றும் அதிகளவு கணக்கீட்டு சக்தி தேவைப் படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

MIT கல்வி நிலைய ஆய்வாளர்கள் உருவாக்கிய இந்த புதிய கணக்கீட்டு இயந்திர (New machine learning) மாடல் இரசாயனத் தாக்கங்களை (Chemical Reactions) நிகழ்த்தி மேற்கொள்ளும் செய்முறையை இலகுவாக்கி கணக்கீட்டையும் விரைவாக செய்ய வைக்கின்றது. மேலும் இந்த ஆராய்ச்சிக்கான நிதியுதவியினை அமெரிக்க இராணுவ ஆய்வு அலுவலகமும், பாதுகாப்புப் பிரிவு மற்றும் அமெரிக்க வான்படை கப்பற்படை பிரிவுகளும், தேசிய விஞ்ஞான அறக்கட்டளையும் வழங்கியுள்ளன.

நிலவுக்கான ஆர்ட்டெமிஸ் செயற்திட்டத்தின் முக்கிய தொகுதி இறுதிக் கட்டத்தில்!

கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் செயற்திட்டத்தில் நாசா மும்முரம் காட்டி வருகின்றது. இதன் ஒரு அங்கமான குறித்த திட்டத்தில் பங்கேற்கும் விண்கல கட்டுமானத் தொகுதி ஒன்றின் (Space station module) கட்டமைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இத்தாலியின் டூரின் தேல்ஸ் அலெனியா ஸ்பேஸ் நிலையத்தில் கட்டுமானப் பணியில் இருந்து வந்த ஹாலோ (HALO) என அழைக்கப் படும் இந்த தொகுதி ஏப்பிரல் 1 ஆம் திகதி அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் கில்பேர்ட் ஆய்வு கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு இதன் இறுதிக் கட்ட கட்டுமானமும், பரிசோதனையும் இடம்பெறவுள்ளது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் Gateway மூலம் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு இந்த HALO Module ஆனது விண்ணில் வசிக்கவும், வேலை செய்யவும், விஞ்ஞான ஆராய்ச்சிகளை நிகழ்த்தவும், உதவி செய்யவுள்ளது.

இதற்கான கட்டளைகள், கட்டுப்பாடு மற்றும் தகவல் கையாளுதல், சக்தியை சேகரித்தல் மற்றும் மின் வழங்குதல் மற்றும் வெப்பத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகளை நிகழ்த்தும் பொறிமுறைகள் HALO உடன் இணைக்கப் பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு ஆற்றலுடன் நிலவுக்கு செல்ல தயாராகி வரும் Gateway program மூலம் பயணிக்கும் ஆர்ட்டெமிஸ் ஓடத்தில் HALO இணைக்கப் படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்ட்டெமிஸ் ராக்கெட்டில் HALO இற்கு மேலே ஐரோப்பிய விண்வெளி நிலையமான ESA இன் தயாரிப்பில் உருவாகி வரும் Lunar Link System எனும் பகுதி விண்வெளி வீரர்களுக்கிடையேயும், பூமியின் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனும், நிலவில் ரோபோக்களுடனும் தகவல் தொடர்பைப் பேண உதவவுள்ளது.

ISS விண்நிலையம் ஆபத்தான நிலையில்! : உறுதியான திட்டமில்லை நாசா எச்சரிக்கை

ஏப்பிரல் 17 ஆம் திகதி, விண்ணில் இயங்கி வரும் சர்வதேச விண்வெளி நிலையமான ISS வராலாற்றில் மிக மோசமான ஸ்திரத் தன்மை அற்ற நிலையை அடைந்துள்ளதாக நாசா தெரிவித்திருந்தது. ISS இன் ரஷ்ய இயங்கு தளத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல்கள் மற்றும் பழைய தொழிநுட்பத்தால் உருவாக்கப் பட்ட இதைத் திருத்துவதற்கான உதிரிப் பாகங்கள் இல்லாத நிலையே இந்த கடின சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதை விட பாதுகாப்பான முறையில் ISS ஐ கைவிடுவதற்கோ அல்லது பூமியுடன் மோதச் செய்வதற்கோ நாசாவிடம் உறுதியான திட்டம் எதுவும் இதுவரை இல்லாததும் ரிச் வில்லியம்ஸ் போன்ற விண்வெளி நிபுணரை அதிருப்தியாக்கியுள்ளது. மேலும் ISS இற்கான அமெரிக்க அரசின் நிதி ஒதுக்கீடும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

1998 முதல் விண்ணில் செயற்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஓடத்தின் ரஷ்ய இயங்கு தளமான ஷ்வெஷ்டா 2019 முதலே பிரச்சினைகளை சந்தித்து வந்தது. 2024 இல் PrK தளத்தில் (Transfer Tunnel) ஏற்பட்ட வாயுக் கசிவு அதிகபட்ச அளவை எட்டியதை அடுத்து அப்பகுதி முழுவதும் மூடப் பட்டது. இந்நிலையில் தற்போது ASAP எனப் படும் விண்வெளிப் பாதுகாப்பு பிரிவு ISS ஓடத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவை 5/5 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் நாசா விஞ்ஞானிகளும், ரஷ்யாவின் றொஸ்கொஸ்மோஸ் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளும் விரைவில் மாஸ்கோவில் சந்தித்து இப்பிரச்சினை தொடர்பில் பேசவுள்ளனர்.

சுமார் 450 டன் எடை கொண்ட ISS ஓடம் கட்டுப்பாட்டை மீறி பூமியின் தரையில் மோதினால் அது மிகப் பெரிய அனர்த்தத்தை ஏற்படுத்தக் கூடியது. இதனால் 2030 அல்லது 2031 அளவில் Space X இன் விசேட ஓடமான USDV மூலம் ISS இனை அதன் ஒழுக்கில் இருந்து விலகச் செய்து பசுபிக் பெரும் கடலில் பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் வீழ்த்த நாசாவின் திட்டம் உள்ளது. ஆனால் இன்னமும் USDV விண்கப்பலின் தயாரிப்பு தொடங்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ISS விண்வெளி அறிவியல் ஆராய்ச்சியில் மனித குலத்துக்கு முக்கிய பங்காற்றி வருகின்றமையும் அவதானிக்கத் தக்கதே ஆகும்.

நியூட்ரினோவுக்கு முன்பை விட 1/2 பங்கு நிறை! : KATRIN பரிசோதனை

துணை அணுத்து துணிக்கைகளிடையே மிகவும் சிறிய நிறையைக் கொண்டிருப்பது நியூட்ரினோக்கள் ஆகும். புதிய பரிசோதனை ஒன்றின் மூலம் முன்னர் கணிக்கப் பட்டதை விட மிகவும் சின்னஞ்சிறிய நிறையை இது கொண்டிருக்கலாம் என்று தற்போது கருதப் படுகின்றது.

முன்னதாக எலெக்ட்ரோன் சார்ஜ் இல்லாத சமநிலைத் துணிக்கையான இந்த நியூட்ரினோ துணை அணுத் துணிக்கைகள் மூலகங்களின் கதிர்வீச்சின் போதும், சூரியனில் தொழிற்பட்டு வரும் கருத்தாக்கத்தில் இருந்தும், பிரபஞ்சத்தின் ஏனைய இடங்களில் இருந்தும் உற்பத்தியாகின்றது.

0.45 electron Volts இற்கும் குறைவான நிறையைக் கொண்டிருக்கும் நியூட்ரோன் தற்போது இதில் 1/2 பங்கே கொண்டிருக்கலாம் என KATRIN என்ற பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக நிறையே இருக்க வாய்ப்பில்லை என்று கருதப் பட்டு வந்த நியூட்ரினோக்கள் அடிப்படைத் துணை அணுத் துணிக்கைகளில் இதுவரை நிறை திருத்தமாகக் கண்டு பிடிக்கப் படாத துகளாக இருந்து வந்துள்ளது.

எலெக்ட்ரோன்களின் நிறையை விட மில்லியனில் 1 மடங்குக்கும் குறைவான நிறையைக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நியூட்ரினோக்கள் ஏன் இந்தளவி மெல்லியதாக அது இருக்கின்றது என விஞ்ஞானிகளை ஆச்சரியப் படுத்தி வருகின்றது. ஜேர்மனியின் கார்ல்ஸ்ருஹே நகரில் அமைந்துள்ள KATRIN ஆய்வகம் தற்போது electron antineutrino எனப்படும் எதிர்ப் பொருள் (Anti matter) வகை நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிப்புறக் கிரகங்களை இனங்காண செயற்கை நுண்ணறிவு

சமீபத்தில் விஞ்ஞானிகள் உயிரினங்கள் வாழத்தக்க சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) இனம் காண செயற்கை நுண்ணறிவு (AI) செய்முறை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த AI மாடலானது பூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கொண்டிருக்கக் கூடிய சுமார் 44 விண்மீன் குடும்பங்களை அடையாளப் படுத்தியுள்ளது.

இந்த AI செய்முறையானது பேர்ன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களால் விருத்தி செய்யப் பட்டதுடன் PlanetS மீளாய்வுக்கான தேசிய போட்டி அமைப்பால் விரைவு படுத்தப் பட்டும் வருகின்றது. Exoplanets இனை கண்டறியும் பாரம்பரிய PLATO, life போன்ற செய்முறைகள் முன்னிறுத்திய திட்டங்கள் அதிகளவு திருத்தமானது என்ற போதும் மிகவும் தாமதமாகவே இடம்பெற்று வருகின்றன. குறித்த ஒரு வலுவான Exoplanet இனை திருத்தமாக அடையாளம் காணும் முயற்சிகள் கூட குறைந்தது 1 வருடம் அல்லது அதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொள்கின்றது.

இந்நிலையில் நேரடி அவதானங்களில் தங்கியிருப்பது மாத்திரமே வழி என்றல்லாது செயற்கை நுண்ணறிவு மூலம் கோள்களின் கட்டமைப்பை நன்கு ஒப்பிட்டு பூமிக்கு ஒப்பான கிரகங்கள் எங்கே ஒழிந்திருக்கலாம் என்ற ஊகத்தைப் பெறுவது இலகுவானதாகும். இவ்வாறு இனம் காணப் படும் Exoplanets இன் எண்ணிக்கை 99% வீதம் திருத்தமாக உள்ளது. கோள்கள் தமது ஆரம்ப கட்டத்தில் எவ்வாறு பரிணாமம் அடைந்து பின் உருவாகி வருகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு கணிணி உருவகப் படுத்துதல் (Computer Simulation) முறை மூலம் செயற்படும் விதத்தில் AI செய்முறையை பேர்ன் ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

ஆரம்பத்தில் குறைந்தது 1 கோளினைக் கொண்டிருக்கும் 1600 விண்மீன் தொகுதிகளை Bern AI system ஆராய்ச்சி செய்து அதில் 44 விண்மீன் தொகுதிகளில் Exoplanets இன் இருப்பை உறுதி செய்தது. AI மூலமான இந்த Exoplanets இனைக் கண்டறியும் அணுகு முறையானது மிகப் பெருமளவில் நேரம் வீணாவதைத் தடுப்பதுடன் தொலைக் காட்டிகளின் செயற்பாட்டிலும் நிலைத் தன்மையை ஏற்படுத்துகின்றது.

ஹபிள் தொலைக் காட்டி விண்ணில் ஏவப்பட்டு 35 வருடங்கள் நிறைவு

1990 ஆமாண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி பூமியை சுற்றி வரும் விதத்தில் விண்ணுக்கு டிஸ்கவரி விண் ஓடத்தில் ஹபிள் தொலைக் காட்டி ஏவப்பட்டு இன்றுடன் 35 வருடங்கள் பூர்த்தி ஆகின்றது. இது குறித்து அமெரிக்காவில் வெளி வரும் Scientific American நாளிதழின் மூத்த செய்தியாளர் மேகன் பார்ட்டெல்ஸ் கூறுகையில் இந்த ஹபிள் தொலைக் காட்டி விண்ணில் நிலை நிறுத்தப் பட்டமையானது வானவியலில் புரட்சிகரமான ஒரு புதிய யுகத்தையே ஏற்படுத்தியுள்ளது என்றுள்ளார்.

இதன் 2.4 மீட்டர் அகலமான ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி விண்ணில் ஏவப்பட்ட பின்பும் சில தடவைகள் விண்வெளி வீரர்களால் பழுது பார்க்கப் பட்டது. மிகத் தொலைவில் உள்ள வான் பொருட்களை ஆராய்வதிலும், நெபுலாக்கள், விண்மீன் உருவாக்கம், அண்டங்களின் தொகுதிகள் என்பவை குறித்தும் ஆய்வு செய்து வரும் ஹபிள் தொலைக் காட்டி இதுவரை 1.6 மில்லியன் புகைப் படங்களை எடுத்தும் 430 டெரா பைட்ஸ் அளவுடைய தகவல்களை சேகரித்தும் உள்ளது.

படைப்பின் தூண்கள் (Pillars of Creation) என அழைக்கப் படும் நெபுலாக்களை (அண்டங்களுக்கிடையேயான தூசு) கச்சிதமாக படம் பிடித்தது மட்டுமல்ல ஹபிள் தொலைக் காட்டியின் சாதனைகள். இது தவிர புளூட்டோவை சுற்றி வரும் நிலவுகள், வியாழனின் துணைக் கிரகமான யுரோப்பாவில் தண்ணீர் இருப்பதற்கன சமிக்ஞைகள், அதிநிறை கருந்துளைகளது இருப்பு பற்றிய நிரூபணங்கள், வியாழனுடன் சூமேக்கர் லெவி 9 வால்வெள்ளி மோதிய தருணம், வருங்காலத்தில் நமது பால்வெளி அண்டமும் அதன் அருகே உள்ள அண்ட்ரோமிடா அண்டமும் ஈர்க்கப் பட்டு சிதையும் வாய்ப்பு என்பவை முக்கியமானவை ஆகும்.

தற்போது ஹபிள் தொலைக் காட்டியின் ஹார்டுவேர் பழுதாகி வருவதால் அது பூமியை நோக்கி ஈர்க்கப் பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு தசாப்தத்துக்குள் அது பூமியின் வளி மண்டலத்தில் மிகவேகமாக நுழைந்து பூமியுடன் மோதும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. 2021 இல் ஏவப் பட்டு ஹபிளுக்கு பதிலாக தற்போது விண்வெளியில் நல்ல நிலையில் இயங்கி வரும் ஜேம்ஸ் வெப் தொலைக் காட்டி கூட நாசாவின் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

எமது பிரபஞ்சத்தின் முதல் தோன்றிய நட்சத்திரங்கள் மற்றும் அண்டங்கள் குறித்து ஆய்வு செய்வதே ஜேம்ஸ் வெப் இன் முக்கிய பணிகளாக உள்ளது.

இப்பிரபஞ்சத்தில் நாம் தனிமையில் இல்லை என்பதற்கு உறுதியான ஆதாரம்! : JWST தொலைக் காட்டி கண்டு பிடிப்பு

exoplanet K2-18b

பூமியில் இருந்து ஓரளவு அதிக ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள கடலால் ஆன பூமியைப் போன்ற கிரகம் ஒன்று உயிர் வாழ்வதற்கான அறிகுறிகளுடன் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. வானில் சூரியனைச் சுற்றி வரும் ஒழுக்கில் நிலை நிறுத்தப் பட்ட ஜேம்ஸ் வெப் விண் தொலைக் காட்டி எடுத்த அகச்சிவப்பு நிற படங்களே இக்கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியமான மூலக் கூறுகளுடன் இது கண்டு பிடிக்கப் பட்டுள்ளதால் நிச்சயம் இது பூமிக்கு ஒப்பான இன்னொரு கிரகம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் வானியலாளர்கள். exoplanet K2-18b என்று பெயரிடப் பட்டுள்ள இந்த கிரகத்தின் வளி மண்டலத்தில் உயிர் வாழ்க்கைக்கு அடிப்படையானவற்றில் அடங்கும் சல்ஃபர் மூலக்கூறுகள் இனம் காணப் பட்டுள்ளது. இதனால் இக்கிரகத்தில் நிச்சயம் நுண்ணுயிர்கள் காணப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விண்ணில் இன்னும் ஒரு தசாப்தத்துக்குள் ஏவப் படவுள்ள நான்ஸி கிரேஸ் ரோமன் போன்ற நவீன விண்தொலைக் காட்டிகள் இக்கிரகத்தில் உயிர் வாழ்க்கைக்கான இன்னும் திருத்தமான தகவல்களை வழங்கக் கூடும் என்றும் எதிர் பார்க்கப் படுகின்றது.

மேலும் இக்கிரகம் பூமியைப் போன்றே தனது சூரியனில் இருந்து உரிய தொலைவில் அமைந்திருப்பதால் அங்கு கடல்களும் காணப் படுகின்றது என்று கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

நாசாவின் அடுத்த விண் தொலை நோக்கி ஏவுகைக்கு ஆயத்தம் – டிரம்ப் உத்தரவால் ரத்து

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றது முதல் கைச்சாத்திட்டு வரும் பல ஒப்பந்தங்களால் ஏற்றுமதி இறக்குமதி வணிகம், பங்குச் சந்தைகள் மாத்திரமன்றி அறிவியல் துறைக்கு அமெரிக்க அரசு ஒதுக்கி வரும் நிதியுதவிகளும் ஆட்டம் கண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சுமார் $3.5பில்லியன் டாலர் பெறுமதியில் தயாரிக்கப் பட்டு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நான்ஸி கிரேஸ் ரோமன் விண் தொலைக் காட்டியின் ஏவுகை அதிபர் டிரம்ப் உத்தரவால் ரத்தாகியிள்ளது.

வேற்றுக் கிரக உயிரினங்கள் மற்றும் இருண்ட பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் கண்டறியும் நோக்கில் ஜேம்ஸ் வெப் தொலைக் காட்டிக்கு நிகராக சூரியனை சுற்றி வரும் சுற்றுவட்டப் பாதையில் இந்த நான்ஸி கிரேஸ் ரோமன் விண் தொலைக் காட்டியும் ஏவப்பட இருந்தது. முன்னதாக 2026 தொடக்கத்தில் ஏவப் படலாம் என்றிருந்த நிலையில் தற்போது 2027 மே மாத இலக்குக்கே பட்ஜெட் ஒதுக்கீடு குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது தவிர நடப்பில் இருக்கும் நாசாவின் பல்வேறு ஆராய்ச்சித் துறைகளுக்குமான நிதி ஒதுக்கீடும் கணிசமாகக் குறைக்கப் பட்டுள்ளது. சூரியன் மற்றும் விண்வெளி பருவநிலை தொடர்பான ஆய்வான Heliophysics இற்கான நிதி ஒதுக்கீடு 50% வீதமாகவும், புவியியல் விஞ்ஞானத்துக்கான நிதியுதவி 50% வீதத்துக்கும் அதிகமாகவும் குறைக்கப் பட்டுள்ளது.

கோள்கள் தொடர்பான கல்வி மற்றும் சூரிய குடும்பம் பற்றிய ஆய்வு ஆகிய துறைகளுக்கு 30% வீதம் குறைக்கப் பட்டுள்ளது. மேலும் வெள்ளிக் கிரகத்தை ஆய்வு செய்யச் செல்லவுள்ள DAVINCI செய்மதியின் பயணம் மற்றும் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து பாறை மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வரும் திட்டம் என்பவையும் தள்ளிப் போகின்றன.

விண்வெளி ஆய்வுக் கொள்கை ஆலோசகர்கள் இந்த பட்ஜெட் நிதிக் குறைவு தொடர்பில் தமது ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.