Author: Navan

  • ஏப்ரல் 1 ஆம் திகதி பல தசாப்தங்களுக்குப் பிறகு மனிதர்களுடன் நிலவுக்கு பயணிக்கின்றது ஆர்ட்டெமிஸ் 2

    ஏப்ரல் 1 ஆம் திகதி பல தசாப்தங்களுக்குப் பிறகு மனிதர்களுடன் நிலவுக்கு பயணிக்கின்றது ஆர்ட்டெமிஸ் 2

    4 விண்வெளி வீரர்களை 10 நாள் பயணமாக நிலவைச் சுற்றி அனுப்பும் ஆர்டெமிஸ் II திட்டத்தைத் தொடங்க நாசா தயாராகி வருகிறது. இருப்பினும், மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது வெப்பக் கவசத்தின் செயல்திறன், சூரியக் கதிர்வீச்சுக்கு ஆளாவது, மற்றும் உயிர் காக்கும் அமைப்புகளின் நம்பகத்தன்மை உள்ளிட்ட முக்கிய அபாயங்கள் நீடிக்கின்றன. அமெரிக்க அரசாங்கத்தின் வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (Aeronautics and Space Administration), புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏப்ரல் மாத தொடக்கத்தில் அதிலும் ஏப்ரல் Read more

  • அண்டங்களின் மத்தியிலுள்ள கட்டமைப்பை பிரதிபலிக்கும் ஈர்ப்பு அலைகள்

    அண்டங்களின் மத்தியிலுள்ள கட்டமைப்பை பிரதிபலிக்கும் ஈர்ப்பு அலைகள்

    அண்டங்களின் (Galaxies) மத்தியிலுள்ள கட்டமைப்பை நாம் இதுவரை அண்மித்திருக்கும் தொழிநுட்பங்கள் மூலமாகக் கூட நேரடியாக அவதானித்து கற்பது இயலாத காரியமாகும். இந்நிலையில் Nature Astronomy பத்திரிகையில் வெளியான புதிய ஒரு கல்வியில் Gravitational Waves எனப்படும் ஈர்ப்பு அலைகள் மூலமாக குறித்த கட்டமைப்பை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு குறித்து தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் அதிநிறை கருந்துளையை (Super Massive Black Hole) சுற்றியுள்ள அடர்த்தியான நட்சத்திரம் மற்றும் கரும் பொருள் (Dark Matter) நிறைந்த சூழலானது ஒவ்வொரு Read more

  • செவ்வாயிலும் சந்திரனிலும் உயிர் வாழ்க்கையை உருவாக்க முடியுமா? சாத்தியம் குறித்து ஆய்வுகள்

    செவ்வாயிலும் சந்திரனிலும் உயிர் வாழ்க்கையை உருவாக்க முடியுமா? சாத்தியம் குறித்து ஆய்வுகள்

    Scientific Reports பத்திரிகையில் பதிவிடப் பட்ட இரு கட்டுரைகளில் சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரகங்களது நிலங்களில் உயிர்வாழ்க்கை சாத்தியம் குறித்து சிமுலேசன் முறையில் செய்யப் பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. இதில் ஒரு கல்வியில் சந்திரனது மண்ணில் சிம்பியோட்டிக் காளான்கள் மற்றும் புழுக்களை உருவாக்கிய பதார்த்தம் மூலம் அந்த மண்ணில் கடலை விதைக்ளை விதைத்து அதன் செடிகளை உருவாக்கும் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு கட்டுரையில் சில நுண்ணியிரிகள் (microbes) சுற்றுச் சூழலில் இருந்து Read more

  • ஒளியில் இருந்து பெறப்படும் சக்தி அளவு அதிகரிக்கும் புதிய தொழிநுட்பம்

    ஒளியில் இருந்து பெறப்படும் சக்தி அளவு அதிகரிக்கும் புதிய தொழிநுட்பம்

    வெப்பத்தை மிகவும் உபயோகமான சக்தி வடிவமாக மாற்றுவது எவ்வாறு என்ற விஞ்ஞானத்தின் மிகப் பழமையான சவால்களில் ஒன்றிட்கு புதிய தொழிநுட்பம் ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் பௌதிகவியலாளர்கள் ஒளியின் விளைவு குறித்து புதிய பார்வையை செலுத்தியுள்ளனர். இப்போது ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டதன் அடிப்படையிலான அவர்களின் தத்துவார்த்த கண்ணோட்டம் சூரிய ஒளியிலிருந்து (மற்றும் விளக்குகள் மற்றும் LED கள்) நாம் கைப்பற்றக்கூடிய ஆற்றலின் அளவை அதிகரிக்கும் சிறப்பு சாதனங்களின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி பின்னர் பயனுள்ள Read more

  • நட்சத்திரப் பயணங்கள் – பாகம் 7

    நட்சத்திரப் பயணங்கள் – பாகம் 7
    ,

    இந்தியாவின் வேத காலத்தில் வானியல் அறிவு என்பது மதச் சடங்குகள், காலக் கணிப்பு, வேளாண்மை, தத்துவம் ஆகிய அனைத்துத் துறைகளுடனும் ஆழமாக இணைந்திருந்த ஒரு அறிவியல் பண்பாட்டு மரபாகும். 4 வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் குறித்த நேரடி குறிப்புக்கள் உள்ளன. சூரியன் பிரபஞ்சத்தின் உயிர்சக்தியாக வர்ணிக்கப் பட்டதுடன் சடங்குகளில் முக்கியமானதான யாகங்களைச் செய்வதற்கு சரியான காலம் அதாவது திதி மற்றும் நட்சத்திரம் அவசியமாகவும் கருதப் பட்டது. இதனால் வானியல் கணிப்புக்கள் Read more

  • பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச் சூழல் மாசுபாடு : விரைவு நடவடிக்கைக்கு அரசாங்கங்களை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

    பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச் சூழல் மாசுபாடு : விரைவு நடவடிக்கைக்கு அரசாங்கங்களை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

    உலக அளவில் பிளாஸ்டிக் மாசுபாடு அதிகரிக்கும் வேகத்தில் கூடி வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதை இனியும் தாமதிக்கக் கூடாது என உலக அரசாங்கங்களை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். போர்ட்ஸ்மௌத் பல்கலைக் கழகத்தின் உலகளாவிய பிளாஸ்டிக் கொள்கை மையத்தின் இயக்குனரான டாக்டர் அண்டாயா மார்ச், Earth & Environment பத்திரிகையில் வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகாவிய பிளாஸ்டிக் கழிவு கட்டுப்பாட்டு ஒப்பந்தத்த்தின் அடிப்படையிலான சர்வதேசத்தின் நிலைப்பாடு கடினமாக பூட்டிக் கிடக்கப் பட்டுள்ள நிலையில் Read more

  • பறக்க மறந்த டைனோசர் இனம்! : சுவடு கண்டுபிடிப்பு

    பறக்க மறந்த டைனோசர் இனம்! : சுவடு கண்டுபிடிப்பு

    சமீபத்தில் பறக்க மறந்த டைனோசர் இனத்தின் சுவடுகளை டெல் அவிவ் பல்கலைக் கழகத்தின் இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளார். 160 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் இறகுகளுடன் வாழ்ந்ததாகக் கருதப்படும் இந்த டைனோசர் இனத்தின் சுவடுகள் கிடைப்பது மிக அரிதான ஒன்றாகும். இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் சுவட்டின் இனம் டைனோசர்கள் மற்றும் ஆதியில் இருந்த பறவைகளுக்கு இடையே இறகுடன் காணப் பட்ட ஆனால் பறக்கும் ஆற்றலை இழந்து விட்ட டைனோசரின் உடையது Read more

  • அணுக்கரு : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் : பாகம் 9

    அணுக்கரு : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் : பாகம் 9
    ,

    ஆல்பா துணிக்கைகளை வெளிப்படுத்தும் கதிர்வீச்சு பகுதிக்கும் அவை ஊடுருவிச் செல்லக் கூடிய விதத்தில் நாக சல்பைட்டால் ஆன திரைக்கும் (fluorescent screen) இடையே தங்கத்தினால் ஆன மெல்லிய திரை ஒன்று வைக்கப் பட்ட போது அதை ஊடுருவாது திசை திருப்பப் பட்ட ஆல்பா கதிர்களின் அளவு நுணுக்குக் காட்டியால் நோக்கப் பட்டது.  இதன் போது தோம்சனின் பிளம் புட்டிங் மாதிரிப்படி அணு முழுக்க பரவிய மின்சார மேகம் போல இருக்குமென நம்பினர். ஆகவே அனைத்து ஆல்பா துகள்களும் Read more

  • 100 வருட தேடுதலுக்குப் பிறகு கரும்பொருளின் இருப்பு கண்டுபிடிப்பு?

    100 வருட தேடுதலுக்குப் பிறகு கரும்பொருளின் இருப்பு கண்டுபிடிப்பு?

    பிரபஞ்சவியலில் (Cosmology) அண்டங்களில் (Galaxies) தென்படும் அசாதாரணமான இயக்கங்களுக்குக் காரணம் என்று கருதப் படும் கரும் பொருள் (Dark Matter) என்ற பதம் மும்மொழியப் பட்டு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியுள்ள நிலையில் அதன் இருப்புக்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசாவின் Fermi காமா கதிர் விண் தொலைக் காட்டி சமீபத்தில் அடையாளம் கண்ட அதிசக்தி காமா கதிர்களை அடிப்படையாகக் கொண்டு டோக்கியோ பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.. கரும்பொருள் துணிக்கைகள் மோதும் போதும் Read more

  • மலைகளில் நிலவும் காலநிலை மாற்றத்தின் வேகம் அதிகரிப்பு : பில்லியன் கணக்கான மக்களுக்கு அச்சுறுத்தல்

    மலைகளில் நிலவும் காலநிலை மாற்றத்தின் வேகம் அதிகரிப்பு : பில்லியன் கணக்கான மக்களுக்கு அச்சுறுத்தல்

    Nature Reviews Earth & Environment என்றபத்திரிகையில். வெளியாகி உள்ள சர்வதேச ஆய்வு ஒன்றில், உலகளாவிய அடிப்படையில் நிலப்பகுதிகளை விட மலைப் பிரதேசங்களில் நிலவும் காலநிலை மாற்றத்தின் தீவிரம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மலைப் பகுதிகளில் வாழும் மக்கள்அல்லது அதில் தங்கியிருப்பவர்கள் என பில்லியன் கணக்கான மக்களுக்கு மோசமான அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. EDCC எனப்படும் (elevation-dependent climate change) இந்த நிகழ்வின் விளைவாக மலைப் பிரதேசங்களின் உச்சியில் நிகழும் காலநிலை மாற்ற வேகம் Read more